Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த படம் ஓடாததால் வீட்டிற்குள்ளேயே முடங்கினேன்: தனுஷ் நாயகி பேட்டி
Recommended Video
மும்பை: ஹிட்டாகும் என்று நினைத்த படம் ஓடாததால் வீட்டிற்குள்ளேயே முடங்கியதாக நடிகை அமிரா தஸ்துர் தெரிவித்துள்ளார்.
இஷாக் இந்தி படம் மூலம் நடிகையானார் அமிரா தஸ்துர். முதல் படம் ஓடாத நிலையில் தனுஷுடன் சேர்ந்து அனேகன் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த மிஸ்டர் எக்ஸ் இந்தி படம் பிளாப் ஆனது.
தொடர்ந்து இரண்டு இந்தி படங்களும் ஓடாமல் போனதால் வேதனை அடைந்தார் அமிரா. பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் அமிரா கூறியதாவது,
நடிகை
இஷாக் படம் ஓடாத போதிலும் நான் நல்ல நடிகை என்று அனைவரும் தெரிவித்தனர். அதனால் எனக்கு அப்போது வருத்தம் இல்லை. நடிப்போ, மாடலிங்கோ தொடர்ந்து வேலை செய்தால் போதும் எனக்கு. பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றிய எதிர்பார்ப்பை ஓரங்கட்டிவிட்டேன்.
எதிர்பார்ப்பு
மிஸ்டர் எக்ஸ் படம் நன்றாக ஓடும் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் ஓடவில்லை. அதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். என் பெற்றோர் என்னை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றனர்.
முடக்கம்
என் மனம் மாற வேண்டும் என்று நினைத்து தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து வந்த பிறகு நான் வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. டான்ஸ் கிளாஸ், ஜிம்மிற்கு கூட செல்லவில்லை. எனக்கு பிரேக் தேவைப்பட்டது. அதன் பிறகு மாடலிங் செய்யத் துவங்கினேன். மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்ததில் வருத்தம் இல்லை.
அழுகை
என் பெரிய பிளஸ் பாயிண்டே அழுகை. ஊ என்றால் அழுதுவிடுவேன். ஆனால் திரையில் ரொமான்ஸ் செய்ய வருவது இல்லை. காதல் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. அதனால் திரையில் போலியாக நடிப்பது கடினமாக உள்ளது.
மாட்டேன்
படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஓவராக என் உடலை எக்ஸ்போஸ் செய்ய மாட்டேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். என் தந்தை என்னை அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டார். இருப்பினும் அவரை வேதனைப்படுத்தும் எதையும் நான் செய்ய மாட்டேன் என்கிறார் அமிரா.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே