தீபா ஷாவிடம் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை: ஓவியா காட்டம்
சில்லுன்னு ஒரு சந்திப்பு ஷூட்டிங் மாதவரத்தில் நடந்தபோது கேரவனுக்குள் படத்தின் நடிகைகளில் ஒருவரான ஓவியா செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் இன்னொரு நடிகையான தீபா ஷா தனது செல்போனில் சத்தமாகப் பேசியுள்ளார். இதையடுத்து ஓவியா கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூற தீபா ஷா டென்ஷனாகி வெளிநடப்பு செய்துவிட்டார். பின்னர் சமாதானம் செய்து அழைத்து வந்தார்களாம்.
இந்நிலையில் தீபா ஷாவிடம் ஓவியா மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது. இது ஓவியாவின் காதுகளுக்கு எட்டவே உடனே அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றை தொடர்பு கொண்டு கூறுகையில்,
கேரவனுக்குள் நான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கையில் தீபா செல்போனில் சத்தம் போட்டு பேசியதால் பேட்டிக்கு இடையூறாக இருந்தது. அதனால் தான் மெதுவாக பேசச் சொன்னோம். அவர் என்னவென்றால் பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டு என் மேனேஜர் அவரை தாக்க முயன்றதாகக் கூறி ஷூட்டிங்கை விட்டே வெளியேறினார்.
அதன் பிறகு தயாரிப்பாளர் அவரை மீண்டும் ஷூட்டிங்கிற்கு வருமாறு அழைத்த பிறகே திரும்பி வந்தார். ஆனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறுவதில் உண்மையில்லை. அவர் ஒரு விளம்பரப் பிரியை என்று எனக்கு தெரியாது என்றார்.
அடடா ஓவியாவை இப்படி டென்ஷனாக விட்டுவிட்டார்களே...


Click it and Unblock the Notifications












