Don't Miss!
- News அமெரிக்காவை உலுக்கிய பால்டிமோர் பாலம் விபத்து! மேலும் 2 பேர் சடலமாக மீட்பு! தேடுதல் பணி தீவிரம்
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Sports ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு காரணமே அதுதான்.. கொதித்த ரசிகர்கள்
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை!
மும்பை: லாக்டவுன் முடிந்து ஷூட்டிங்கை எப்போது தொடங்குவார்கள் என்று தெரியவில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்திருந்தவர் இந்தி நடிகை யாமி கவுதம்.
அடுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ஜெய், சந்தானம் நடித்த தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
நம்பாதீங்க.. சும்மா கிளப்பி விடுறாங்க.. வைரலாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்!
ஆக்ஷன் ஜாக்சன்
இதையடுத்து, தமிழில் நடிக்காத யாமி கவுதம் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு, அஜய் தேவ்கனின் ஆக்ஷன் ஜாக்சன், உரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக், சர்கார் 3, பாலா உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து கின்னி வெட்ஸ் சன்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
கொரோனா தடுப்பு
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும், கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
யாமி கவுதம்
இந்நிலையில், நிறுத்தப்பட்டுள்ள சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் நடிகை யாமி கவுதம். லாக்டவுனுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறும்போது, 'படங்களின் பட்ஜெட் விஷயங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும். செலவுகளை குறைப்பதற்கான வழிகளை பார்க்கவேண்டும்.
டிஜிட்டல் தளங்கள்
மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று தெரியாது. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு டிஜிட்டல் தளங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிஜிட்டல் தளங்களுக்கான படங்களில் நடிக்க எனக்கும் அழைப்புகள் வருகின்றன. இந்த மாற்றம் ஏற்கனவே நடந்து வருகிறது.
பாதுகாப்பு முக்கியம்
லாக்டவுனுக்குப் பிறகு எப்போது ஷூட்டிங் தொடங்கும் என தெரியவில்லை. அப்படி தொடங்கப்பட்டாலும் புதிய வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது இருப்பதை விட வேறு சிலவும் இருக்கலாம். இருந்தாலும் இப்போது நமது பாதுகாப்புதான் முக்கியம். அதனால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை என்றார்.
-
திடீரென உயிரிழந்த சேஷு.. பதறியடித்து ஓடிவந்த சந்தானம்.. நள்ளிரவில் குவிந்த லொள்ளு சபா டீம்
-
Actor Kamal haasan: பிரித்விராஜ் கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
-
லொள்ளு சபா முதல் வடக்குப்பட்டி ராமசாமி வரை.. சேஷுவை கடைசி வரை கைவிடாத சந்தானம்.. ஆனால்?