Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
அப்பாவின் மரணத்தை மறக்க முடியவில்லை, திருமணம் குறித்த சிந்தனையே இல்லை.. பாவனா
திருவனந்தபுரம்: தனது தந்தையின் மரணத்தால் திருமணம் குறித்து தற்போது எந்த சிந்தனையும் இல்லை என்று நடிகை பாவனா கூறியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா 'நம்மள்' என்ற படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்று அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பாவனா நடித்திருக்கிறார்.
பாவனா தற்போது தாய் மொழியான மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பாவனா
தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து வெயில், கிழக்குக் கடற்கரை சாலை, தீபாவளி, ஜெயம் கொண்டான் மற்றும் அசல் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான அசல் படத்தைத் தொடர்ந்து தமிழில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தந்தை மறைவு
கடந்த செப்டம்பர் 24ம் தேதி பாவனாவின் தந்தை பாலச்சந்திரன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இவர் மலையாள சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாவனா சமீபத்தில் அளித்த பேட்டியில் "எனது தந்தையின் மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது.
தந்தை
இன்னும் வீட்டில் எனது தந்தை எனக்காக காத்திருப்பது போலவே உணர்கிறேன். என்னால் எனது தந்தையின் நினைவுகளை மறக்க முடியவில்லை. எனினும் நான் தற்போது நடித்து வரும் 'ஹலோ நமஸ்தே' படக்குழுவினர் என் மீது மிகவும் அன்பு காட்டுகின்றனர். எனக்காக 2 வாரங்கள் தங்களது படப்பிடிப்பை தள்ளி வைத்த படக்குழுவினர், என்னை தொடர்ந்து உற்சாகமூட்டி வருகின்றனர்.
ஆண் வேடத்தில்
ஒரு படத்திலாவது ஆண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது. எனினும் அது இதுவரை நிறைவேறவில்லை. சிறிய வயதில் நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் கடவுள் அருளால் அது நடந்து விட்டது.
திருமணம்
எனது திருமணத்தை அடுத்த ஆண்டு நடத்த எனது குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராமல் எனது தந்தை இறந்து போனதால், எனது திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. உண்மையில் சொல்லப் போனால் நானோ எனது குடும்பத்தினரோ என்னுடைய திருமணம் குறித்து தற்போது சிந்திக்கும் மனநிலையில் இல்லை". என்று பாவனா தெரிவித்திருக்கிறார்.