Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆதித்யவர்மா மோசமானவன்.. அப்படி ஒரு காதலன் எனக்கு வேண்டாம்.. நடிகை பனிடா சந்த் தடாலடி!
Recommended Video
சென்னை: ஆதித்யவர்மா போன்ற காதலன் தனக்கு வேண்டாம் என நடிகை பனிடா சந்த் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம், இந்தியில் கபிர் சிங் என்றும் தமிழில் ஆதித்யவர்மா என்றும் தயாரானது. இந்தப்படம் நேற்று நாடு முழுவதும் ரிலீஸானது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக இந்தி பட நடிகை பனிடா சிங் நடித்திருந்தார்.
நடிப்புக்கு பாராட்டு
ஒரிஜினல் வெர்ஷனான அர்ஜூன் ரெட்டி படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசாய்யா இந்தப் படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், துருவ் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
இதுபோன்ற காதல் ஓகேவா?
இந்நிலையில் படத்தின் நாயகியான பனிடா சந்த் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது படத்தில் உள்ளது போன்ற காதல் உங்களுக்கு ஓகேவா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
ரொம்ப மோசமானவன்
அதாவது, இதுபோன்ற ஒரு காதல் என் வாழ்க்கையில் இருக்க வேண்டாம். ஆதித்யவர்மா ரொம்ப மோசமானவன், நிறைய குறைகள் அவனிடம் உள்ளது. ஆனால் அதுபோன்ற காதல் நிஜத்தில் இருப்பதையும் மறுக்க முடியாது.
சரியாக செய்திருக்கிறோம்
இதுபோன்றவற்றை காட்டுவதற்குதான் சினிமா. நாங்கள் அதனை போற்றாமல் சரியாக செய்திருக்கிறோம் என நம்புகிறோம். நாயகனின் கோபத்தால் வரும் துன்பங்களை காட்டியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார் பனிடா சந்த்.