Don't Miss!
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வலி ரொம்ப வலி ஆனால் தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: அமலா பால்
சென்னை: கணவர் விஜய்யை பிரிந்தபோது மன வலி அதிகமாக இருந்ததாகவும் தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்தார். நம்பிக்கை தவறாக பயன்படுத்தப்பட்டதாக விவாகரத்து குறித்து விஜய் தெரிவித்தார்.
இந்நிலையில் இது பற்றி அமலா கூறுகையில்,
கிறிஸ்துமஸ்
மதம், ஜாதி, கலாச்சாரத்தை தாண்டி உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்பொழுதும் என் குடும்பத்தாருடன் கொண்டாடுவேன்.
மருத்துவமனை
என் தந்தை கடந்த ஆண்டு மருத்துவமனையில் இருந்ததால் கிறிஸ்துமஸ் பண்டிகையை டாக்டர்கள், நர்ஸுகளுடன் கொண்டாடினோம். இந்த ஆண்டு கொச்சியில் உள்ள வீட்டில் உறவினர்களுடன் கொண்டாடுகிறோம்.
படங்கள்
என் கை நிறைய படங்கள் உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்துள்ளேன்.
மனவலிமை
நான் என்னை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நான் எமோஷனலாகவும், மனதளவிலும் எவ்வளவு வலிமையானவள் என்பதை புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாளையும் ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறேன்.
விவாகரத்து
திருமணமாகி விவாகரத்தாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது மனவலி அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நானும், விஜய்யும் அவரவர் உலகில் மகிழ்ச்சியாக உள்ளோம்.