twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாடகைக்கு விட்டுட்டு பெட்ரூமை எட்டியா பார்க்க முடியும்?: விபச்சாரம் பற்றி பிரியங்கா சோப்ரா

    By Siva
    |

    டெல்லி: தனது வீட்டில் விபச்சாரம் நடந்தது தனக்கு தெரியாது என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

    நடிகை பிரியங்கா சோப்ரா மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது ஃபிளாட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் விபச்சாரம் நடத்தி சிலர் போலீசில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.

    அதற்கு அவர் கூறுகையில்,

    வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டால் அங்கு சென்று படுக்கை அறையில் என்ன நடக்கிறது என்றா பார்க்க முடியும். அதனால் அங்கு நடந்தது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இந்த வழக்கு பற்றி போலீசார் விசாரணை நடத்தி எது கூறினாலும் அதை நான் கேட்டுக் கொள்வேன்.

    இது போலீஸ் வழக்காகிவிட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாம் எல்லாம் சட்டத்தை மதிப்பவர்கள். பாஜிராவ் மஸ்தானி படப்பிடிப்பில் நான் மயங்கியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்றார்.

    English summary
    Commenting on recent reports about her flat being used to run a sex racket, actress Priyanka Chopra says she had no clue about what was happening in her property as she doesn't snoop around.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X