Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்
Recommended Video
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்த பேட்டியில், சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து எனக்கு கிடைத்து விட்டது. வந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி கொண்டேன். அதனால் தான் தோல்விப் படங்களிலும் நான் நடிக்க வேண்டியது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமும், முதிர்ச்சியும் எனக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் கில்லி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தமிழில் மகிழ் திருமேனி இயக்கிய தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இவர் தமிழில் கடைசியாக சூர்யா நடித்த படம் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை. தமிழில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2வில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா
சில நாட்களுக்கு முன்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததால் தான் பட வாய்ப்புகள் இல்லை என்று சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருகின்றனர்.
சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து எனக்கு கிடைத்து விட்டது. வந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி கொண்டேன். அதனால் தான் தோல்விப் படங்களிலும் நான் நடிக்க வேண்டியது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தியில் சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்ததும், தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். ஆனாலும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமும், முதிர்ச்சியும் எனக்கு வந்துவிட்டது. சும்மா நான்கு பாடல் காட்சிகளில் மட்டும் வந்து விட்டு போவதில் எனக்கு விருப்பம் இல்லை.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்துள்ளேன். தமிழிலும் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டேன். இந்தியில் ரன்வீர் சிங்குடனும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடனும் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது, என்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.