அட்ஜெஸ்ட் செய்யாததால் பல படங்களிலிருந்து தூக்கி எறியப்பட்டிறுக்கிறேன்.. பிரபல கவர்ச்சி நடிகை பரபர!
மும்பை: அட்ஜெஸ்ட் செய்யாததால் பல படங்களில் தூக்கி எறியப்பட்டதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டமால் ரசிகர்களை கிரங்கடித்து வருபவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். ஹரியானாவை பூர்விகமாக கொண்ட மல்லிகா ஷெராவத், மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.
2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார் மல்லிகா ஷெராவத். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் களம் இறங்கியிருக்கிறார்.

கவர்ச்சியில் தாராளம்
ஆடை விஷயத்தில் சிக்கனமும் கவர்ச்சியில் தாராளமும் காட்டி வரும் மல்லிகா ஷெராவத் அண்மையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

தூக்கி எறியப்பட்டிருக்கிறேன்
அதாவது கதாநாயகர்களுடன் நெருங்கி பழக விரும்பாத ஒரே காரணத்திற்காக தான் பல பட வாய்ப்புகளை இழந்திருப்பதாக கூறியுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளாததால் பலப் படங்களிலிருந்து தான் தூக்கி எறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

படுக்கைக்கு வா
தன்னை இயக்குநர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ படுக்கைக்கு வா என நேரடியாக அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தப்படி தான் இணங்கவில்லை என்றும், தான் தைரியமான பெண் என்பதால் பிரச்சனை வரும் என்பதால் தன்னை நேரடியாக யாரும் அப்ரோச் செய்ததில்லை என்றும் அவர் கூறினார்.

ஆண்களுக்கும் பாதுகாப்பு
மீடு போன்ற இயக்கங்கள் தேவை என்று கூறியுள்ள மல்லிகா ஷெராவத், பெண்களை போன்று ஆண்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழல் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். மீடுவால் பெண்களின் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டு பெண்களுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத்.


Click it and Unblock the Notifications











