Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
“விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை”.. பிரபல நடிகையின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்!
விஜய், அட்லி படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தளபதி 63ல் தான் நாயகியாக நடிக்கவில்லை என நடிகை ராஷ்மிகா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். அட்லியின் இயக்கத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பது ஏற்கனவே படக்குழுவால் உறுதி செய்யப்பட்டு விட்டது. இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அது தெலுங்கு நடிகை ராஷ்மிகா தான் என சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது.
🙈🙈❤️❤️ pic.twitter.com/gwk1R28th9
— Rashmika Mandanna (@iamRashmika) November 27, 2018
ஆனால், அது உண்மையில்லை டிவிட்டர் பக்கம் வாயிலாக நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகாவின் இந்தப் பதிவால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தம் அடைந்துள்ளனர். விஜய் படம் மூலமாக அவர் தமிழில் அறிமுகமாவார் என ஆசையாக இருந்தனர். ஆனால், அது பொய் என ஆகிவிட்டதால், விரைவில் அவர் தமிழில், அதுவும் விஜய் ஜோடியாக அறிமுகமாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
ராஷ்மிகா தெலுங்கில் வெற்றிப்படமான கீதாகோவிந்தம் படத்தில் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.