நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்: இப்போது புலம்பும் நடிகை ஸ்வேதா பாசு
ஹைதராபாத்: தான் தவறான முடிவுகள் எடுத்துவிட்டதாக விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகை ஸ்வேதா பாசு கையும், களவுமாக சிக்கினார். விசராணைக்கு பிறகு அவர் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்வேதா கூறுகையில்,
பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தினசரி செலவுக்கே பணம் இல்லாமல் திண்டாடும் நிலை. அந்நேரம் பார்த்து தான் விபச்சாரம் செய்தால் பணம் கிடைக்கும் என்று எனக்கு சிலர் ஆசை வார்ததை காட்டினார்கள். நான் எனது சினிமா வாழ்க்கையில் தவறான முடிவுகள் எடுத்துவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
செய்த தவறுக்காக வருந்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
Comments


Click it and Unblock the Notifications