Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பஹத்தை இழக்க விரும்பாமல்... சினிமாவை விட்டுக் கொடுத்த நஸ்ரியா!
சென்னை: பஹத் பாசிலை இழக்க விரும்பாமல் தான் சினிமாவிலிருந்து விலகி, குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார் நஸ்ரியா.
நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. துறு துறு கண்கள், திறமையான நடிப்பு என குறுகிய காலத்திலேயே தமிழில், திருமணம் என்னும் நிக்காஹ், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்தார்.
தமிழில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென, கடந்த 2014ம் ஆண்டு பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் நஸ்ரியா.
ஷாக்கான ரசிகர்கள்...
நஸ்ரியாவின் இந்த திடீர் முடிவு, அவரது ரசிகர்களை மட்டுமல்ல, தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறைந்த வயதில் ஏன் அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.
சினிமாவிற்கு பை பை...
ஆனால், அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத நஸ்ரியா, பாசில் வீட்டு மருமகளானார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கும் பை பை சொன்னார்.
25 வயதில் திருமணம்...
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தனது திருமண முடிவு குறித்து மனம் திறந்துள்ளார் நஸ்ரியா. இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘25 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என தான் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பஹத்தை இழக்க விரும்பவில்லை...
ஆனால், பஹத் வீட்டில் அவருக்கு அவசர அவசரமாக பெண் தேடியதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் அவரது திருமணத்தை முடித்துவிட அவர்கள் திட்டமிட்டதாகவும் கூறியுள்ள நஸ்ரியா, அதனாலேயே பஹத்தை இழக்க விரும்பாமல் உடனடியாக திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.