Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியா மீது கடும் கோபத்தில் மணிப்பூர் மக்கள்..: சொல்கிறார் 'மேரிகோம்' பிரியங்கா சோப்ரா
மும்பை: இந்தியா மீது மணிப்பூர் மக்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்கிறார் வெற்றிப்படமான 'மேரிகோம்' நாயகி பிரியங்கா சோப்ரா.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோமின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'மேரிகோம்' திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. பல மாநில அரசுகள் மேரிகோம் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துள்ளன.
இந்த திரைப்படம் குறித்து 'மேரிகோம்' நாயகி பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது:
2 ஆண்டுகால உழைப்பு
மேரிகோம் திரைப்படத்தில் நடித்தது மிகவும் சவாலானது. இதற்காக 2 ஆண்டுகாலம் உழைத்தேன். மேரிகோமுடன் தங்கி அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் உள்வாங்கிக் கொண்டேன்.
கடும் கோபத்தில் மணிப்பூர்வாசிகள்
மணிப்பூருக்கு நான் சென்ற போதெல்லாம் அந்த மக்கள் இந்தியா மீது கடும் கோபத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கோபம் ஏன்?
இந்தியாவால் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற வேதனையில் இருக்கின்றனர். அவர்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.
தணியும்
தற்போதைய மேரிகோம் திரைப்படம் மூலம் மணிப்பூர் மக்களும் இந்த நாட்டின் ஒரு அங்கம் என உணர்ந்திருப்பார்கள் எனக் கருதுகிறேன்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.