Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியா மீது கடும் கோபத்தில் மணிப்பூர் மக்கள்..: சொல்கிறார் 'மேரிகோம்' பிரியங்கா சோப்ரா
மும்பை: இந்தியா மீது மணிப்பூர் மக்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்கிறார் வெற்றிப்படமான 'மேரிகோம்' நாயகி பிரியங்கா சோப்ரா.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோமின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'மேரிகோம்' திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. பல மாநில அரசுகள் மேரிகோம் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துள்ளன.
இந்த திரைப்படம் குறித்து 'மேரிகோம்' நாயகி பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது:
2 ஆண்டுகால உழைப்பு
மேரிகோம் திரைப்படத்தில் நடித்தது மிகவும் சவாலானது. இதற்காக 2 ஆண்டுகாலம் உழைத்தேன். மேரிகோமுடன் தங்கி அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் உள்வாங்கிக் கொண்டேன்.
கடும் கோபத்தில் மணிப்பூர்வாசிகள்
மணிப்பூருக்கு நான் சென்ற போதெல்லாம் அந்த மக்கள் இந்தியா மீது கடும் கோபத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கோபம் ஏன்?
இந்தியாவால் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற வேதனையில் இருக்கின்றனர். அவர்கள் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.
தணியும்
தற்போதைய மேரிகோம் திரைப்படம் மூலம் மணிப்பூர் மக்களும் இந்த நாட்டின் ஒரு அங்கம் என உணர்ந்திருப்பார்கள் எனக் கருதுகிறேன்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.