Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
15 வயசுல வீட்டை விட்டு எஸ்கேப்.. 2 வருஷம் போதைக்கு அடிமை... பிரபல நடிகையின் பகீர் பிளாஷ்பேக்!
மும்பை: தனது 15 வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டேன் என்றும் இரண்டரை வருடம் போதைக்கு அடிமையாகி இருந்தேன் என்றும் பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தி நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர்.
திடீர்னு.. சமுத்திரகனியை வச்சு செய்யும்.. மீம் கிரியேட்டர்கள்.. என்னாச்சு!
ஜெயலலிதா
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார். எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி நடிக்கிறார். அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.
View this post on Instagram#KanganaRanaut talks about the time when she couldn’t close her eyes because tears won’t stop. 🙏🙏
A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on
பாலிவுட்டில் கஷ்டம்
சமீபத்தில் நடிகை கங்கனா, சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை மும்பையின் பாலி ஹில் பகுதியில் தொடங்கியுள்ளார். மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற இந்த ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் கங்கனாவின் சகோதரி ரகோலி சந்தல், அவர் மகன் பிரித்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கங்கனா சார்பில் அவரது டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட்டில், தான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.
போதைக்கு அடிமை
'நான் 15, 16 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். அந்த நட்சத்திரங்களை என் கைகளால் பிடித்துவிட முடியும் என்று உணர்ந்தேன். பிறகு சினிமாவுக்கு வந்தேன். ஒன்றரை, இரண்டு வருடம் போதைக்கு அடிமையாகி இருந்தேன். என் வாழ்க்கை குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட வகை மக்களுடன் இருந்தேன். மரணம் மட்டுமே அவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி இருக்க முடியும். நான் டீனேஜில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது.
ராஜயோகா
அப்போது என் வாழ்வில் ஒரு நல்ல நண்பர் வந்தார். அவர் எனக்கு யோகாவை அறிமுகப்படுத்தினார். ராஜயோகா பற்றிய புத்தகத்தைக் கொடுத்தார். பிறகு சுவாமி விவேகானந்தரை என் குருவாக ஏற்றுக்கொண்டு என்னை நானே வளர்த்துக்கொண்டேன்.
அந்த சவாலான நேரங்கள் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், நான் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பேன்.
நல்ல நேரம்
ஆன்மிக வழிகாட்டுதல் இல்லாமல் என் மனோதிடத்தை வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. என் புத்தியையோ, திறமையையோ, உடல் அரோக்கியத்தையோ என்னால் வளர்த்திருக்க முடியாது. அதனால் நான் சொல்ல வருவது, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட நேரங்கள் மட்டுமே நல்ல நேரமாக இருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் ஏராளமானோர் வரவேற்றுள்ளனர்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்