Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னேன்: சமந்தா
அஞ்சானில் அழகுப் புயலாக அசத்தியுள்ள சமந்தா, கல்லூரி நாட்களில் சூர்யாவைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னாராம். கஜினி படத்தில் சூர்யா நடித்தபோது, பட புரமோசனுக்கு வந்த சூர்யாவை சைட் அடித்தேன் இப்போது அதே சூர்யா உடன் நடிப்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார் சமந்தா.
பள்ளி, கல்லூரி நாட்களில் சராசரி பெண்ணாகத்தான் இருந்தேன். சினிமாவில் நடிக்க வந்த பின்னர்தான், மேக் அப், ஹேர் ஸ்டைல் மேன் உபாயத்தில் அழகாக மாறியிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்லுகிறார் சமந்தா.
செம பிகர் இல்லை
நான் படிக்கும் போது என்னை யாரும் செம பிகர் என்று சொன்னதில்லை. நிறைய மெனக்கெட்டு என்னை அழகாக மாற்றிக்கொண்டுள்ளேன் என்கிறார் சமந்தா.
ஐ லவ் யூ சூர்யா
ஐந்து வருடத்திற்கு முன்பு கஜினி பட புரமோசனுக்காக கல்லூரிக்கு வந்த சூர்யாவைப் பார்த்து, ஐ லவ் யூ சூர்யா என்று கத்தியிருக்கிறேன்.
நம்ப முடியவில்லை
அந்த சம்பவத்தை சூர்யாவும் மறக்கவில்லை. இப்போது அதே சூர்யா உடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பது நம்ப முடியாத விசயம்தான்.
ரொமான்ஸ் காட்சிகள்
சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடிக்கக் காரணம் கவுதம் மேனன்தான். அவர்தான் இந்த உயரத்தைக் கொடுத்தார். அவருக்குத்தான் நன்றி சொல்லனும்.
நான் செம பிஸி
நான் ஈ பட வெற்றிக்குப் பின்னர் அஞ்சான், கத்தி, விக்ரமுடன் ஒரு படம் என இந்த ஆண்டு நான் ரொம்ப பிஸி என்ற சமந்தா, வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் எப்பவும் மாறலாம் தத்துவமாக கூறியுள்ளார்.