Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராகிங் பயம்... காலேஜைக் ‘கட்’ அடிப்பதற்காக நடிகையாக மாறிய கவுதமி
சென்னை: ராகிங் பயத்தால் இன்ஜினியரிங் கல்லூரியின் துவக்க நாட்களில் கல்லூரிச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே தான் நடிகையானதாகத் தெரிவித்துள்ளார் நடிகை கவுதமி.
80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், பிரபு என பல படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகியவர், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
ரீ என்ட்ரி...
கமல் ஜோடியாக பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரியான கவுதமி, விரைவில் பிரபு ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
நடிகையான கதை...
இந்நிலையில், தனியார் எப்.எம். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவுதமி, தான் நடிகையான கதையை விவரித்துள்ளார். அதில் அவர், "நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தில் நான் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கவில்லை.
முதல்பட வாய்ப்பு...
இன்ஜினியரீங் சேர்ந்த எனக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தது. படக்குழுவினர்கள் உறவினர்கள் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.
ராகிங் பயம்...
நானோ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு வேறு காரணம் இருந்தது. அதாவது, புதிதாக கல்லூரியில் காலெடி எடுத்து வைப்பவர்களுக்கு நிச்சயம் ராகிங் பயம் இருக்கும். எனவே, முதல் இரு வாரங்கள் கல்லூரி செல்வதைத் தவிர்க்கவே அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.
குருசிஷ்யன்...
படப்பிடிப்பு முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிய எனக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ரஜினி, பிரபு இணைந்து நடித்த குருசிஷ்யன் பட வாய்ப்பும் கிடைத்தது.
தெளிவான முடிவு...
அதுவரை சினிமாவைப் பற்றி எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லாமல் இருந்தேன் நான். அதற்குப் பிறகு தான், இனி இது தான் எனது துறை என முடிவெடுத்து நடிக்கத் தொடங்கினேன். அதற்குப் பின் அந்த முடிவில் இருந்து பின் வாங்கவில்லை' என கவுதமி தெரிவித்துள்ளார்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!