Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மறுக்கிறார்
முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் டேம் 999 என்ற படத்தில் காட்டியுள்ளனர். மலையாள இயக்குனர் சோஹன்ராய் எடுத்த இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா பெயரில் டேம் 999 படத்துக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன நயன்தாரா அதை மறுத்தும், கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"நான் டுவிட்டரிலும் இல்லை. பேஸ்புக்கிலும் இல்லை. என் பெயரில், யாரோ வேண்டாதவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். டேம் 999' படம் பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. என் பெயரில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.