Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
4 மணிநேரம் மேக்கப், 120 உடை: சாவித்ரியாக நடிக்க கீர்த்தி இவ்வளவு கஷ்டப்பட்டாரா!!
சென்னை: சாவித்ரியாக நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர்.
சாவித்ரியாக நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது,
பயம்
சாவித்ரியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வினும், தயாரிப்பாளரும் கூறியபோது பயமாக இருந்தது. நான் எப்படி சாவித்ரியாக நடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் என்னால் நிச்சயம் முடியும் என்று நம்பிக்கை அளித்தனர்.
கீர்த்தி
சாவித்ரி நடித்த படங்களை பார்த்தேன். அவரின் மகள் விஜயசாமுண்டீஸ்வரியை சந்தித்து சாவித்ரி பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். சாவித்ரி ஒரு காலத்தில் ஒல்லியாக இருந்துள்ளார்.
எடை குறைப்பு
மகாநதி படத்திற்காக நான் வெயிட் போடவில்லை. பேடிங் வைத்து நடித்தேன். சொல்லப் போனால் இந்த படத்திற்காக ஒல்லியாகிவிட்டேன். தினமும் மேக்கப் போட மட்டும் 4 மணிநேரம் ஆகும். மேக்கப் போட்டுவிட்டு 7 முதல் 8 மணிநேரம் நடித்தேன். மேக்கப் போட்ட பிறகு சாப்பிட முடியாது. ஜூஸ் தான் குடிக்க முடியும்.
கஷ்டம்
மகாநதி படத்தில் நடித்து முடிக்க ஒரு வருடம் ஆனது. இந்த படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் 80 சதவீதம் சாவித்ரியாகவே மாறிவிட்டதாக படக்குழு கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்திற்காக மட்டும் நான் 120 உடைகள் அணிந்துள்ளேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.