Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா
சென்னை: பணத்தை விட திறமையான நடிகை என்ற பெயரை வாங்கவே நான் விரும்புகிறேன் என்று நடிகை இனியா தெரிவித்து இருக்கிறார்.
யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இனியா தொடர்ந்து மவுனகுரு, வாகை சூடவா, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார்.
கதாநாயகி மட்டுமின்றி ஒரு பாடல் மற்றும் வில்லி வேடங்களிலும் நடித்து நான் எந்த வேடத்தையும் ஏற்பேன் என்று இயக்குநர்களுக்கு சொல்லாமல் சொல்லிய இனியா தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதைவிட நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை வாங்கவே தான் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள உலகில் பிரபலமாக இருக்கும் இனியா தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.
வைகை எக்ஸ்பிரஸ், கரையோரம் மற்றும் காதல் சொல்ல நேரமில்லை போன்ற படங்களில் நடித்திருக்கும் இனியாவிற்கு தமிழில் ரஜினி, விஜய் மற்றும் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாம்.