Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சின்ன வயசுல அம்மா கையால விளக்குமாத்தால அடி வாங்கி இருக்கேன்: நடிகை கங்கனா ரனௌத்
அன்னையர் தினத்தை முன்னிட்டு பி அன்ட் ஜி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனௌத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
நான் சிறுபிள்ளையாக இருக்கையில் அம்மா ஆஷா என்னை விளக்குமாறால் அடித்துள்ளார். அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்து பாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் என் அம்மா எனக்காக பாட்டு பாடியதாக ஞாபகமே இல்லை. எங்கம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். என் அம்மா ஒரு சமஸ்கிருத ஆசிரியை. பள்ளியில் அவரைப் பார்த்து மாணவ-மாணவியர் பயப்படுவார்கள்.
என் அம்மா எனக்கு நடிப்பைத் தவிர எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனக்கு பாத்திரம் தேய்க்கத் தெரியும், சமைக்கத் தெரியும். சினிமா ஒத்து வரவில்லை என்றாலும் நான் பிழைத்துக் கொள்வேன். திருமணமாகிப் போகிற வீட்டில் எங்கள் பெயரைக் கெடுக்கப் போகிறாய் என்று என் அம்மா தெரிவித்தார் என்றார்.