நான் குண்டா இருக்கேன்னு கேவலமா பேசினாங்க.. டிப்ரஷன்ல இருந்தேன்.. கொட்டித் தீர்த்த அபர்ணா பாலமுரளி!
சென்னை: நடிகர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்தவர் தான் அபர்ணா பாலமுரளி.
2015 ஆம் ஆண்டு ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி.
தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த அபர்ணா பாலமுரளிக்கு 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

மலையாளத்தில் பிஸி
தமிழில் சில படங்கள் நடித்த பிறகும் தொடர்ந்து மலையாளத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் அவருக்கு அதிகரித்து வந்ததால் தமிழில் நடிக்காமல் இருந்தார், பிறகு சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் நடித்த எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மையம் போன்ற படங்கள் இவருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தராத நிலையில், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மெகா ஹிட் ஆனது. சூரரைப்போற்று திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது.

உருவ கேலிக்கு ஆளானேன்
சாதாரண நடிகை போல இல்லாமல் சூரரைப்போற்று படத்திலேயே கொஞ்சம் குண்டாக தான் இருந்தார் நடிகை அபர்ணா. அதன் பிறகு அதிகமாக குண்டாக மாறிய அபர்ணா பாலமுரளி நெட்டிசன்கள் இடையே கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். பலர் கமெண்டுகள் மூலம் உருவ கேலியும் செய்தனர். தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அபர்ணா பாலமுரளி பல வீடியோக்களையும் பதிவிட்டிருந்தார். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொள்ளாத இந்த சோசியல் மீடியாக்களில் வலம் வரும் பல கேவலமான பதிவுகளும் அசிங்கமான பதிவுகளும் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

என்ன வேனா பேசலாமா
ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாத காரணத்தால் சோசியல் மீடியாவில் மற்றவர்களை பலரும் கேலி கிண்டல் செய்கின்றனர்.
நடிகைகள் கொஞ்சம் டிரெஸ்ஸிங் மாற்றி செய்தாலும், வித்தியாசமாக ட்ரை செய்தாலும் சோசியல் மீடியாக்களில் எங்களைப் பற்றி அசிங்கமாக செய்திகளை பரப்புகின்றனர். இந்த மாதிரியான கமெண்ட்டுகள் அவர்களை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணராமலேயே அவர்கள் இதனை செய்து வருகின்றனர். பார்ப்பதற்கு ஆன்ட்டி போல் இருக்கிறீர்கள், அசிங்கமாக இருக்கிறீர்கள் என்று பல வார்த்தைகளை பேசியது மிகவும் தன்னை பாதித்ததாகவும், இதனால் பல நாட்கள் தான் டிப்ரஷனில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

டைம் கொடுப்பதில்லை
உடல் எடை அதிகமாகி விட்டால் அதைக் குறைப்பதற்கு அதைப்பற்றி நாம் யோசிப்பதற்கு கூட இடம் கொடுக்காமல், நம்மை டார்கெட் செய்வது போல நம்மை பற்றியே செய்திகள் உலா வருகின்றது என்று மனவேதனையுடன் கூறியுள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.
நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஷிவானி நாராயணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அபர்ணா நித்தம் ஒரு வானம் படத்திலும், நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதை எல்லாம் தாண்டி மலையாளத்தில் பயங்கர பிஸியாக இருக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.


Click it and Unblock the Notifications











