விஜய் படத்தில் நடிக்க யாரும் என்னை கேட்கவில்லை: நஸ்ரியா
சென்னை: நயன்தாராவுக்கும் தனக்கும் இடையே மோதல் என்ற செய்தியை கேட்டு நஸ்ரியா சிரித்துள்ளார். மேலும் விஜய் படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த நையாண்டி படத்தின் நாயகி நஸ்ரியா அவர் நடிப்பால் பிரபலமானதை விட அவர் செய்த தொப்புள் பிரச்சனையால் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டார்.
தொப்புள் பிரச்சனை ஒரு வழியாக சுமூகமாக தீர்ந்து படம் ரிலீஸானது.

விளாசிய நயன்
நஸ்ரியா தொப்புள் பிரச்சனையை பெரிதாக்கியது குறித்து நயன்தாரா விளாசியதாக செய்திகள் வெளியாகின.

நஸ்ரியா
நயன்தாரா நஸ்ரியாவுக்கு எதிராக பேசி வருவதாகவும், நஸ்ரியா நயன்தாராவுக்கு எதிராக பேசுவதாகவும் செய்திகள் வந்தன.

தோழிகள்
நயன்தாராவுக்கும், தனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் நல்ல தோழிகள். என்னை பற்றி வரும் வதந்திகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்றார் நஸ்ரியா.

விஜய்
விஜய் படத்தில் நடிக்க நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியிருந்ததாகவும், தொப்புள் பிரச்சனையை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் விஜய் படத்தில் நடிக்க தன்னை யாரும் ஒப்பந்தம் செய்யவே இல்லை என்று தெரிவித்துள்ளார் நஸ்ரியா.


Click it and Unblock the Notifications











