Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உன் மூஞ்சிக்கெல்லாம் நடிக்க வந்துட்டன்னு சிரிச்சாங்க: டாப்ஸி வருத்தம்
Recommended Video
மும்பை: தான் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தன்னை கேவலமாக பேசியதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி பாலிவுட் சென்றார். பிங்க் படம் மூலம் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.
வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறை பற்றி அவர் கூறியிருப்பதாவது,
நிராகரிப்பு
ஸ்டுபிட் காரணங்களால் என்னை நிராகரித்துள்ளனர். நீ அழகாக இல்லை, கிளாமராக இல்லை, நீ ரொம்ப சீரியஸான நடிகை, நீ நடிகையாக லாயக்கில்லாதவள், நீ பெரிய ஆளின் மகள் இல்லை, உன் பெயரை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்று எல்லாம் இயக்குனர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
நடிப்பு
என் போன்று என் தங்கை கஷ்டப்பட விட மாட்டேன். இந்த உலகில் எனக்கு என் தங்கை தான் மிகவும் பிடிக்கும். அவர் மீது அதிகம் பாசம் வைத்துள்ளேன்.
சொல்லவில்லை
சினிமா துறைக்கு வராதே என்று நான் என் தங்கையிடம் கூறவில்லை. ஆனால் என் மனதில் அது தான் இருந்தது. எனக்கு நடிக்க மட்டுமே விருப்பம். முன்பு சினிமா துறையின் செயல்பாடுகள் எனக்கு தெரியாது.
கதாபாத்திரம்
வித விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது எப்படி, சினிமா துறையில் என் மதிப்பை கூட்டுவது எப்படி என்று தற்போது யோசிக்கிறேன். ஒன்னுமே தெரியாமல் வந்து இவ்வளவு கற்றுக் கொண்டதே பெரிய விஷயம் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.