twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஒரு முறை என்னாச்சுனா...: ரெஜினா கசான்ட்ரா

    By Siva
    |

    சென்னை: தான் பல முறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ரெஜினா கசான்ட்ரா தெரிவித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. அவர் தற்போது திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ரெஜினா பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

    பாலியல் தொல்லை

    பாலியல் தொல்லை

    சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலம் அருகே நடந்து சென்றபோது ஒருவர் தனது உதடுகளை பிடித்தாகவும், அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகவும் ரெஜினா தெரிவித்துள்ளார்.

    துணிச்சல்

    துணிச்சல்

    ஒரு முறை அல்ல பல முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். இரண்டு, மூன்று முறைக்கு பிறகு எனக்கு துணிச்சல் வந்துவிட்டது. ஒரு முறை என்னிடம் சில்மிஷம் செய்யப் பார்த்த ஆளை பிடித்து அடித்து நொறுக்கினேன் என்கிறார் ரெஜினா.

    சனுஷா

    சனுஷா

    நடிகைகள் அமலா பால், சனுஷா ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது துணிச்சலாக போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ரெஜினாவும் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

    கைது

    கைது

    சனுஷா ரயிலில் தூங்கியபோது ஒருவர் அவரின் உதடுகளை பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சனுஷா அந்த நபர் மீது போலீசில் புகார் செய்து அவரை சிறையில் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Regina Cassandra said that she was molested many times. She added that after two such incidents she beat up a person who tried to molest her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X