யாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்துடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என நடிகை ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. இருவருக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில்தான் நட்பு மலர்ந்தது.
இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகாவும் நெருங்கிய தோழிகள் என்பது ஊரறிந்த விஷயம்.

லிப்லாக்
அண்மையில் தங்கள் நட்பின் ஓராண்டு விழாவை ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து கொண்டாடினர். அதனை சமூக வலைதளங்களில் லைவ் செய்தனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு லிப்லாக் கொடுத்ததெல்லாம் வேறு கதை.

இணைந்து நடிப்பீர்களா
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா தத்தாவிடம், உங்களின் நெருங்கிய தோழியான யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிப்பீர்களா என கேட்கப்பட்டது.

எனக்கு பிடித்திருந்தது
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நல்ல படங்களில் நடித்து வருகிறார். அவரின் ஜாம்பி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நடிக்க வேண்டாம்
நல்ல கதைகள் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனா இப்போது சேர்ந்து நடிக்க வேண்டாம் என தோன்றுகிறது.

ஐடியாவே இல்லை
நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃபிரன்ட்ஸ். இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எங்களுக்குள் போட்டி ஏற்பட்டு நட்பு கெட்டு போய்விடும். அதனால் எப்போதும் போல நல்ல தோழிகளாகவே இருக்க விரும்புகிறோம். சேர்ந்து நடிக்கும் ஐடியாவே இல்லை. என ஐஸ்வர்யா தத்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











