Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கல்யாணத்திற்கு முன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்... இது ஸ்ருதிஹாசனின் ஆசை
சென்னை: தனது தாய், தந்தையைப் போலவே சமூக வரையறைக்குள் சிக்க விரும்பவில்லை என்றும், திருமணத்திற்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
திரையுலகப் பிரபலங்களான கமல் -சரிகா தம்பதியினரின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். நடிகை, இசையமைப்பாளர், பாடகி எனப் பன்முகத் திறமையாளரான ஸ்ருதி, தற்போது தமிழில் விசாலுடன் பூஜை என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஸ்ருதி. அதில், அவர் தனது பெற்றோர் மற்றும் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
அழகான குடும்பம்...
ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
சந்தோஷமான குடும்பம்...
ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
சமூக வரையறைகள்...
தாய்-தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை.
பர்ஸ்ட் குழந்தை தான்...
திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தந்தையைப் போலவே...
தன் தந்தையைப் போலவே மனதில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி பட்டென உடைத்துப் பேசும் ஸ்ருதியின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.