Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2019ல் பரபரப்பை கிளப்பிய நடிகைகளின் போட்டோ ஷுட்.. முற்றும் திறந்து திணறடித்தவர்களின் பட்டியல்!
சென்னை: 2019ஆம் ஆண்டில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய பரபரப்பை கிளப்பிய நடிகைகள் குறித்த தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
2019 ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகள் குறித்து நினைவுகூர்ந்து வருகிறோம்.
அந்த வகையில் 2019ல் போட்டோ ஷுட் மூலம் பரபரப்பை கிளப்பிய நடிகைகள் யார் என்பது குறித்த தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
இடம் தெரியாமல்
வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகைகள் அறிமுகமானார்கள். இதனால் பழைய நடிகைகள் சிலர் இருக்கும் இடம் தெரியாமல் போயினர்.
கவர்ச்சியை மூலதனமாக்கி
அவர்களில் சிலர் எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் தலைக்காட்டி தங்களுக்கான இடத்தை பிடித்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தனர். அதற்காக திறமை என்ற ஒன்றை மறந்து, கவர்ச்சியை மட்டும் மூலதனமாக போட்டு பகீர் போட்டோ ஷுட்டுகளை நடத்தினர்.
யாஷிகா ஆனந்த்
அவர்களில் முக்கியமானவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து ஆகிய டபடங்களில் நடித்த அவருக்கு எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சட்டைசெய்யாத யாஷிகா
இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார். ஆனால் அதற்கு பிறகும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியை கையிலெடுத்துள்ள யாஷிகா, தொடர்ந்து படு கவர்ச்சியான போட்டோ ஷுட்டுகளை நடத்தி வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தபோதும், அவற்றை சட்டை செய்யாமல் உள்ளார் யாஷிகா ஆனந்த்.
மீரா மிதுன்
அடுத்தப்படியாக மீரா மிதுன், இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பண மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுனும் பிரபலம் பெற வேண்டி பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றார். ஆனால் அதன்பிறகு கிடைத்த வாய்ப்புகளும் பறிபோனதால், அதிர்ச்சியடைந்த மீரா மிதுன் கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு ஆபாச போட்டோ ஷுட்டுகளை நடத்த ஆரம்பித்துவிட்டார்.
கடும் விமர்சனம்
அரை நிர்வாணம் முக்கால் நிர்வாணம் என உடம்பை காட்டி அதிரடி காட்டி வருகிறார் மீரா மிதுன். குறிப்பாக மார்பழகை மட்டுமே காட்டி இவர் பதிவிடும் படங்கள் வேற லெவல். சிலர் இந்த போட்டோக்களை ரசித்தாலும் பலர் கேவலமாக விமர்சித்து வருகின்றனர்.
சாக்ஷி அகர்வால்
அடுத்து சாக்ஷி அகர்வால், இவரும் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றவர்தான். அதற்கு முன்பு காலா, விஸ்வாசம் என சில படங்களில் தலைக்காட்டிய அவருக்கு பின்னர் படத்தில் லீடிங் ரோலில் நடிக்க ஆசை வந்துவிட்டது.
யானை மீது அமர்ந்து
இதற்காக முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக பிகினி போட்டோ ஷுட் நடத்திய அவர், ரசிகர்களே கடுப்பாகும் அளவுக்கு கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார். காலண்டருக்காக யானை மீது அமர்ந்து அவர் நடத்திய போட்டோ ஷுட் பெரும் வைரலானது.
ரம்யா பாண்டியன்
அடுத்து ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் அறிமுகமானதோடு சரி. அதன்பிறகு பெயர் சொல்லும் அளவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சேலையில் அறிமுகமான அவர், அதிலேயே கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார்.
இடுப்பை எடுத்துக்காட்டி
சேலையில் கூட இப்படி கவர்ச்சிக்காட்ட முடியுமா என்று யோசிக்க வைத்தவர் ரம்யா பாண்டியன். ஆனால் மாராப்பை திறந்து காட்டி, இடுப்பு மடிப்பை எடுத்துக்காட்டி அவர் பதிவிட்ட போட்டோக்கள் சர்ச்சைககளை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரெட்டி
அடுத்து சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி. இதுவரை ஸ்ரீரெட்டி நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை. ஆனால் நடிகை என்றழைக்கப்படும் ஸ்ரீரெட்டி, திரை பிரபலங்களை விமர்சித்தும், செக்ஸியாக நடத்திய போட்டோ ஷுட்டுக்களும் வைரலானது.
அருவருப்பாக உள்ளது
கவர்ச்சி போட்டோக்கள், ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை, உள்ளாடை அணியாத உடம்பு என தன் இஷ்டத்துக்கு காட்டி அலற வைத்து வருகிறார். அவரது போட்டோக்களை ரசித்து வர்ணிக்க ஒரு கூட்டம் இருந்தாலும், அவை அருவருப்பாக உள்ளது என்று சொல்லவும் ஒரு கூட்டம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஷாலு ஷம்மு
துணை நடிகை ஷாலு ஷம்மு... வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் தலைக்காட்டியவர். படங்களில் எல்லாம் குடும்ப குத்து விளக்காய் இருந்த அவர் பிகினியில் நடத்திய போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
படுக்கையில் செம ஹாயாக
ஷாலு ஷம்முவா இப்படி என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சிக்கடையை விரித்து மிரள வைத்தார். தொடர்ந்து பப்புகளில் அரைகுறை ஆடையில் அவர் போட்ட கெட்ட ஆட்டமும் அவர் மீது ரசிகர்களுக்கு இருந்த மரியாதையை குறைத்தது. ஆனாலும் அசராத ஷாலு ஷம்மு படுக்கையறையில் செம ஹாயாக போஸ் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அதிதி பாலன்
உண்மையிலேயே நடிகையின் கவர்ச்சி ஷுட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் என்றால் அது நடிகை அதிதி பாலனின் போட்டோ ஷுட்டை பார்த்துதான். அருவி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் சப்பளம் போட்டு ஸ்ட்ராங்காக உட்காந்தார் அதிதி பாலன். ஆனால் என்ன செய்வது, அதன்பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் கிடைக்காததால் அப்செட் ஆனார் அதிதி பாலன்.
வாங்கிக்கட்டிய அதிதி பாலன்
இதனால் கவர்ச்சியை காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என்று எண்ணிய அதிதி பாலா, ரம்யா பாண்டியன் ஸ்டைலில் சேலையில் மாராப்பை விலக்கியும் ஒரு பக்க மார்பை காட்டியும் அதிர வைத்தார். அப்போதும் வாய்ப்புகள் வராததால் உள்ளாடை அணியாமல் டீப் நெக் ஓபனில் முன்னழகை காட்டி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டினார்.
ராய் லக்ஷ்மி
அடுத்து ராய் லக்ஷ்மி.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள இவர், தனது கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை ஷேர் செய்வதற்காகவே சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி மலையாளம் தெலுங்கு என மற்ற மொழிகளில் பிஸியாக இருந்தாலும் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்றே சொல்லலாம்.
இது ஒரு பிழைப்பா?
அந்தளவுக்கு இந்த ஆண்டு கவர்ச்சி போட்டோக்களை வாரி வழங்கினார் ராய் லக்ஷ்மி. குறிப்பாக துபாயில் இருந்தப்படி இவர் பதிவிட்ட பிகினி போட்டோக்கள் வேற ரகம். அவரது அழகை இஞ்ச் பை இஞ்ச்சாக ரசித்தனர் ரசிகர்கள். ஆனாலும் திறமை மீது நம்பிக்கை வைக்காமல் இப்படி உடம்பை காட்டி பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா என்று கோபப்பட்ட ரசிகர்களும் உண்டு.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!