அனுஷ்கா பற்றி தீயாக பரவிய தகவல்: அதிர்ச்சியான ரசிகர்கள்
Recommended Video

சென்னை: அனுஷ்கா நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்ற தகவல் தீயாக பரவியது.
அனுஷ்காவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். அவர்களும் தீவிரமாக தேடியும் மாப்பிள்ளை அமையவில்லை.
இந்நிலையில் தான் அனுஷ்கா திரையுலகை விட்டு விலகுகிறார் என்ற தகவல் பரவியது

சினிமா
அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு பாகமதி ரிலீஸானது. அதன் பிறகு அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. பிரபாஸின் புதுப்படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அவர். மேலும் அவரும், மாதவனும் சேர்ந்து நடிக்கும் சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது.

அனுஷ்கா
அனுஷ்கா சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார் என்று கடந்த 2 நாட்களாக டோலிவுட்டில் பேசப்படுகிறது. அவர் புதுப்படங்கள் எதிலும் நடிக்கத் துவங்காததால் அந்த தகவல் உண்மை என்று பலரும் நம்பிவிட்டனர். ஏன் அனுஷ்கா இந்த திடீர் முடிவு என்று அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வதந்தி
அனுஷ்கா சினிமாவுக்கு முழுக்கு போடவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அனுஷ்காவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர் கேதர்நாத் கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளனர். அந்த பூஜையில் அனுஷ்காவும் கலந்து கொண்டுள்ளார்.

திருமணம்
அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பிரபாஸோ அனுஷ்கா நல்ல தோழி மட்டுமே என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











