Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனது திருமணம் நிறுத்தப்பட்டதா?...சூப்பராக பதில் தந்த நடிகை பூர்ணா
சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. கேரளாவை சேர்ந்தவரான இவர் தனது நிஜ பெயரான ஷாம்னா காசிம் என்பதை சினிமாவிற்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார்.
தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா, கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அகண்டா, தலைவி, த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
கடைசியாக விசித்திரன் படத்தில் நடித்த பூர்ணா, தற்போது வெப்சீரிஸ்களில் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது வருங்கால கணவரை சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சூப்பே பங்காரம் ஆயனி.... அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய நடிகை பூர்ணா!
தொழிலதிபரை கரம் படிக்கிறார்
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதுன் சிஇஓ.,வாக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த பூர்ணாவும், ஆஷிஃப்பும், தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து, திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.
திருமண தேதி சொல்லலியே
இவர்களின் திருமண தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் பூர்ணாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது போன்ற போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த பூர்ணா, பிறகு பட்டுப்புடவையில் செம அழகாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையும் வெளியிட்டார்.
என்னது திருமணம் நிறுத்தப்பட்டதா
இந்த சமயத்தில், பூர்ணாவிற்கும் அவரது காதலருக்கும் பிரேக்அப் ஆகி விட்டதாகவும், இதனால் அவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் மீடியாக்களில் தகவல் பரவியது. இது பற்றி பூர்ணாவிடம் கேட்ட போது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றார். இருந்தாலும் அவரின் திருமணம் நின்று போய் விட்டதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.
பூர்ணாவின் சூப்பர் பதில்
இதனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனது வருங்கால கணவருடன் சேர்ந்து க்யூட்டான போட்டோஷுட் ஒன்றை நடத்தி, அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் பூர்ணா. இருவரும் காதலுடன் இருக்கும் அந்த போட்டோக்களுடன், என்றும் என்னுடன் என்ற கேப்ஷன் மற்றும் ஹார்ட் எமோஜிக்களையும் பூர்ணா பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் தொடர் கேள்வி
விரைவில் பூர்ணாவின் திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பூர்ணா தற்போது கமிட்டாகி உள்ள படங்களில் நடித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ள போகிறாரா? திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்வாரா? என ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.