ப்ரியா ஆனந்துக்குப் பிடித்த 'பாணா காத்தாடி'!
வளரும் நடிகர்கள் காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்தால்தானே ஆச்சர்யம்...
மறைந்த முரளியின் மகனும் பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, பரதேசியில் நல்ல நடிகராக பெயர் வாங்கியவருமான அதர்வா மட்டும் விலக்காக இருக்க முடியுமா...
அவருக்கும் காதல் பூத்திருக்கிறது, உடன் நடிக்கும் முன்னணி நாயகி ப்ரியா ஆனந்த் மீது.
இருவரும் இரும்புக் குதிரை படத்தில் நடித்தபோது காதல் பற்றிக் கொண்டதாம்.

படப்பிடிப்பில் இருக்கும் நேரங்களைவிட, கூடிப் பேசி மகிழும் நேரங்கள்தான் அதிகமாம் இருவருக்கும்.
யூனிட் ஆட்களே பரப்பி வரும் இந்த பரபர கிசுகிசு குறித்து பிரியா ஆனந்திடம் கேட்டால், அட விடுங்க... என்பதுபோலப் பார்க்கிறார்.

"அதர்வாவும் நானும் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிற நட்சத்திரங்கள். எங்கள் நிலை உணர்ந்து நடக்கிறோம். படப்பிடிப்பில் கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கம் காட்டினோம். இதை வைத்து காதல் என்றால் எப்படி?
எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்," என்றார்.
நல்லாருந்தா சரி!


Click it and Unblock the Notifications











