Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
4 வருஷம் கேப்... மீண்டும் சினிமாவுக்கு ரிட்டர்ன் ஆகும் பிரபல ஹீரோயின்... தமிழுக்கும் வருவாரா?
சென்னை: சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரபல ஹீரோயின், மீண்டும் நடிக்க வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் தமிழில் சிம்பு ஹீரோவாக நடித்த குத்து, அர்ஜுன் நடித்த கிரி, தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம், ஜீவாவின் சிங்கம்புலி உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் தனது திவ்யா ஸ்பந்தனா என்று மாற்றிக் கொண்டு நடித்து வந்தார். இடையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை.
'மாஸ்டரு'க்குப் பிறகு விஜய்யை இயக்கலையாம்... இந்த ஹீரோவைதான் சுதா கொங்கரா இயக்கப் போறாராமே!
தொழிலதிபர்
கடைசியாக, நாகராகாவு என்ற கன்னட படடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இவர் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரபேலை காதலித்து வந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
வதந்தி வேண்டாம்
பின்னர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இதை திவ்யாவின் அம்மா மறுத்தார். அவர், திவ்யா, ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். திவ்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.
பிரிந்து விட்டனர்
திவ்யாவுக்கு, இந்தியாவை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வர மனமில்லை. இதனால் 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்துவிட்டனர்' என்று கூறினார். அரசியலில் ஆர்வம் கொண்ட திவ்யா, காங்கிரஸ் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு மாண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீண்டும் நடிக்கிறார்
பிறகு 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். இந்நிலையில் அவர், இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
வரவேற்பு
கேஜிஎப் உட்பட பல படங்களை நிராகரித்த திவ்யா, இப்போது கன்னடத்தில் தர்ஷன் நடிக்கும் வரலாற்று படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிப்பாரா என்ற தகவல் தெரியவில்லை. அவர் மீண்டும் நடிக்க வருவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!