ஓ, இதனால் தான் ஐஸ்வர்யா ராய் ஃபேஸ்புக், ட்விட்டரில் இல்லையா?
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.
கம்ப்யூட்டர், செல்போன் காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்கள் இருக்கும் நபருக்கு நிஜத்தில் ஒரு நண்பர் தான் இருப்பார். இப்படி நம் அருகில், நம்மை சுற்றி உள்ளவர்களை கண்டுகொள்ளாமல் ஃபேஸ்புக், ட்விட்டரில் பிசியாக உள்ளோம்.
இந்நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில்,
செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களால் மக்களுக்கு தங்கள் அருகில் உள்ளவர்களை கவனிக்க நேரம் இல்லை. ஏதாவது காரணம் கூறுகிறோம். அடுத்தவரை பார்க்கவோ, பேசவோ நேரம் இல்லை. காரணம் நாம் நம் செல்போன்களில் பிசியாக உள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications











