எனக்கு மட்டும் ஏன் இப்படி? ஜோசியம் பார்த்த அனன்யா

By Siva

Ananya
தனக்கு மட்டும் ஏன் நல்லதே நடக்க மாட்டேன் என்கிறது என்று நினைத்த நடிகை அனன்யா ஜோதிடரை அழைத்து பிரசன்னம் பார்த்துள்ளார்.

அனன்யாவுக்கு நேரம் சரியில்லை போன்று. முதலில் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்த கையோடு அனன்யாவுக்கு அடி மேல் அடி விழுகிறது. நிச்சயம் முடிந்த பிறகு ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை தெரிய வந்தது. உண்மையைத் தெரிந்து கொண்டவுடன் அனன்யாவின் பெற்றோர் நேராக காவல் நிலையம் சென்று ஆஞ்சநேயன் மீது புகார் கொடுத்தனர்.

அதன் பிறகு ஆஞ்சநேயன் திருமணம் ஆனவர் என்றாலும் பரவாயில்லை நான் அவரைத் தான் கல்யாணம் செய்வேன் என்று அனன்யா அடம்பிடித்ததாகவும், அவரை பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மலையாளப் படமான நாடோடி மன்னன் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த அன்னயா கீழே விழுந்ததில் கை பிசகியது. தற்போது அவர் பிளாஸ்திரியுடன் ஷூட்டிங்கிற்கு செல்கிறாராம்.

இப்படி அடுத்தடுத்து அடி விழுகிறதே என்று நினைத்த அவர் ஜோதிடரை அழைத்து பிரசன்னம் பார்த்துள்ளாராம். ஜோதிடர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X