Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நயன்தாரா இல்லை ஸ்ருதி தான் 'தல' ஹீரோயின்
சென்னை: தல 56 படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் தான் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 56 படத்தில் நடிக்க உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி படம் பூஜையுடன் துவங்குகிறது. படத்திற்கு அச்சமில்லை என்ற தலைப்பை சிவா தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
அஜீத்துக்கு ஜோடி யார் என்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.
சமந்தா
தல 56 படத்தில் அஜீத் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் என்று துவக்கத்தில் கூறப்பட்டது. பின்னர் அந்த பேச்சு அடங்கிவிட்டது.
ஹன்சிகா
அஜீத்தின் அடுத்த படத்தின் நாயகி ஹன்சிகா தான் என்று சில நாட்கள் பேசப்பட்டது.
ஸ்ருதி
புலி படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் ஸ்ருதி ஹாஸன் தான் அஜீத்தின் ஹீரோயின் என்று செய்திகள் வெளியாகின.
பிந்து மாதவி
தல 56 படத்தில் அஜீத்துக்கு இரண்டு ஜோடி. அதனால் பிந்து மாதவியும், ஸ்ருதி ஹாஸனும் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டது.
நயன்தாரா
இல்லை இல்லை பிந்து மாதவியோ, ஸ்ருதியோ அஜீத்துடன் நடிக்கவில்லை நயன்தாரா தான் நடிக்கப் போகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
மீண்டும் ஸ்ருதி
நயன்தாரா இல்லை ஸ்ருதி தான் தல 56 படத்தின் ஹீரோயின் என்பது முடிவாகிவிட்டதாம். இது குறித்து ஸ்ருதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தாகிவிட்டது. இந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.