கொண்டாட வேண்டிய நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும் வந்த பிரச்சனை
Recommended Video

சென்னை: கொண்டாட வேண்டிய நேரத்தில் த்ரிஷா மற்றும் சமந்தாவுக்கு சொல்லி வைத்தது போன்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரிலீஸாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
மேலும் அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ஏ மாய சேசாவேவும் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கொண்டாட்டம்
விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் ஏ மாய சேசாவே படங்கள் ரிலீஸாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள். த்ரிஷா, சமந்தாவுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தன.

ஸ்ரீரெட்டி
த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த நிலையில் அவர் நடிகர் ராணாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் ஸ்ரீரெட்டி. இதையடுத்து அந்த புகைப்படம் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பிவிட்டது.

போட்டோஷூட்
சமந்தா போட்டோஷூட் ஒன்றுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் ஏ மாய சேசாவே பற்றி வாழ்த்துவதற்கு பதில் சமந்தாவின் கவர்ச்சியை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

ஹீரோயின்கள்
மகிழ்ச்சியான நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிறரின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர். கவுதம் மேனன் பட நாயகிகளுக்கு ஒரே நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











