Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஐடி ரெய்டா... அதெல்லாம் வழக்கமான நடைமுறைதான்... சொல்கிறார் நடிகை ராஷ்மிகா
ஐதராபாத்: வருமான வரித்துறை ரெய்டு என்பது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார் நடிகை ராஷ்மிகா
Recommended Video
கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அங்கு நடித்து வந்த அவர், சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது. பின்னர் பிசியாகிவிட்ட ராஷ்மி, தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.
மூடப்பட்ட அரங்குக்குள் திடீர் தீ... பாவனா நடிக்கும் பட ஷூட்டிங்கில் பரபரப்பு... உயிர் தப்பிய ஹீரோ
தமிழில் சுல்தான்
மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.
வருமான வரி சோதனை
இவரது வீடு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாருடன் சென்று சோதனை நடத்தினர். அப்போது நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை.
சொத்து ஆவணங்கள்
வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை ரஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
வழக்கமானது
விராஜ்பேட்டையில் உள்ள ரஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனை குறித்து ராஷ்மிகாவிடம் கேட்டபோது ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார். பின்னர், இது வழக்கமான வருமான வரி நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.
வளர்கிறேன்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இல்லை. இப்போதுதான் வளர்ந்துவருகிறேன். இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.