Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கௌதம் கார்த்திக்கிற்கு ரொமான்ஸே வரலை, அவரோட நடித்தது டார்ச்சர்: ராகுல் ப்ரீத் சிங்
சென்னை: என்னமோ ஏதோ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் நடித்தது டார்ச்சர் அதுவும் இன்பமான டார்ச்சர் என்று நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
அருண் விஜய், மம்தா மோகன்தாஸ் நடித்த தடையறத் தாக்க படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராகுல் ப்ரீத் சிங். அவர் கௌதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்த என்னமோ ஏதோ படம் அண்மையில் ரிலீஸானது.
இந்நிலையில் அவர் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் விவரம்,
கோல்ஃப்
மாடலிங், நடிப்பு தவிர கோல்ஃப் விளையாடுவதில் ராகுல் ப்ரீத்துக்கு அதிக விருப்பமாம். அவர் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கோல்ஃப் போட்டியில் விளையாடி இருக்கிறார். மாடலிங் செய்வதற்காக கோல்ஃபை விட்டுள்ளார்.
என்னமோ ஏதோ
‘அத மொதலைந்தி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்னமோ ஏதோ. தெலுங்கில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தை பார்த்த உடன் இப்படி நமக்கு ஒரு கதாபாத்திரம் கிடைக்காதா என்று ராகுல் ப்ரீத் நினைத்துள்ளார். அந்த நேரத்தில் தான் என்னமோ ஏதோ பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
டார்ச்சர்
கௌதம் கார்த்திக்குடன் நடித்தது ராகுல் ப்ரீத்துக்கு டார்ச்சராக இருந்ததாம். அதாவது அருமையான டார்ச்சர். அவர் தான் தனக்கு அப்பாடக்கர் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்தார் என்றார் ராகுல் ப்ரீத்.
ரொமான்ஸ்
கௌதம் கார்த்திக்கிற்கு ரொமான்ஸே வராமல் பாடுபட்டதாகவும், தன்னிடம் இருந்து ரொமான்ஸை கடன் வாங்கியதாகவும் ராகுல் ப்ரீத் தெரிவித்தார்.