Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பைவிட மோசமானது! - ஹன்சிகா ஆவேசம்
சென்னை: நடிகைகளின் நிர்வாணப் படங்கள், ஆபாச வீடியோக்களை மோசடியாக உருவாக்கி வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா.
சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குளியலறையில் கேமராவை மறைத்து வைத்து, ஹன்சிகா அல்லது அவரைப் போன்ற பெண் குளிப்பதைப் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் படத்திலிருப்பது ஹன்சிகாதான் என நம்பினர். அந்த அளவுக்கு ஹன்சிகாவின் முகம் தெளிவாகத் தெரிந்தது படத்தில்.
இதுகுறித்து ஹன்சிகா தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. போலீசிலும் அவர் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இப்போது அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இது. சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம்.
ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்," என்றார்.
சரி.. போலீசில் புகார் கொடுத்திருக்கலாமே... ஏன் கொடுக்கவில்லை? என்று கேட்டதற்கு, "அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. பின்னர் ஏன் புகார் செய்ய வேண்டும்?,'' என்றார்.
இதேபோன்ற பிரச்சினையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை த்ரிஷா சிக்கினார். அவர் உடனடியாக சைபர் க்ரைமில் புகார் செய்ததன் பேரில் அவரது குளியல் வீடியோ இணையதளங்களிலிருந்து நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.