Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க 5 கோடி சம்பளம் கேட்டு, படக்குழுவை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் 'மர்டர் 2', 'ஹவுஸ்புல் 2', 'கிக்', 'பிரதர்ஸ்' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
ஜாக்குலின் நடித்து சமீபத்தில் வெளியான 'ஹவுஸ்புல் 3' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 'டிஷூம்', 'எ பிளையிங் ஜாட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் 150 வது படமாக உருவாகும் 'கத்திலண்டோடு' (கத்தி ரீமேக்) படத்தில் ஜாக்குலினை, சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு முயற்சித்துள்ளது.
இதற்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்களிடம் 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு அவர்களை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஜாக்குலின் ஆர்வம் காட்டாதது தான் இதற்குக் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் ஜாக்குலினும் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் படக்குழு ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதாம். இருந்தாலும் தந்தைக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க ராம் சரண் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.