Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!
மும்பை: சய்பை மகோத்சவத்தில் 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றிற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
கிக் படத்தில் சல்மான் கானிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜாக்குலின் தனது சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி உள்ளாராம். படங்கள் மட்டுமின்றி விளம்பரம், நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சய்பை மகோத்சவிற்காக 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜாக்குலின் ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த சய்பை என்பது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த கிராமமும் கூட.
வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கு பெறுவர். எனவே, இதில் நிகழ்ச்சி நடத்துவதற்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு ஜாக்குலினுக்கு 3 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் வழங்கப் பட்டுள்ளதாம். இந்த சய்பை விழாவில் பரினீதி சோப்ரா, ரிச்சா சட்டா, ஹூமா குரேஷி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சல்மான் கான் போய் ராஜபக்சேவுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் ஜாக்குலினும் கலந்து கொண்டார். ஜாக்குலின் மூலமாகவே சல்மானை ராஜக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வரவழைத்தார் என்று பேச்சு எழுந்தது நினைவிருக்கலாம்.