Don't Miss!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!
மும்பை: சய்பை மகோத்சவத்தில் 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றிற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
கிக் படத்தில் சல்மான் கானிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜாக்குலின் தனது சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி உள்ளாராம். படங்கள் மட்டுமின்றி விளம்பரம், நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சய்பை மகோத்சவிற்காக 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜாக்குலின் ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த சய்பை என்பது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த கிராமமும் கூட.
வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கு பெறுவர். எனவே, இதில் நிகழ்ச்சி நடத்துவதற்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு ஜாக்குலினுக்கு 3 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் வழங்கப் பட்டுள்ளதாம். இந்த சய்பை விழாவில் பரினீதி சோப்ரா, ரிச்சா சட்டா, ஹூமா குரேஷி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சல்மான் கான் போய் ராஜபக்சேவுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் ஜாக்குலினும் கலந்து கொண்டார். ஜாக்குலின் மூலமாகவே சல்மானை ராஜக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வரவழைத்தார் என்று பேச்சு எழுந்தது நினைவிருக்கலாம்.