Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
3 நிமிட நிகழ்ச்சிக்காக ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கிய ஜாக்குலின்!
மும்பை: சய்பை மகோத்சவத்தில் 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றிற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
கிக் படத்தில் சல்மான் கானிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜாக்குலின் தனது சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி உள்ளாராம். படங்கள் மட்டுமின்றி விளம்பரம், நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சய்பை மகோத்சவிற்காக 3 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜாக்குலின் ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த சய்பை என்பது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த கிராமமும் கூட.
வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கு பெறுவர். எனவே, இதில் நிகழ்ச்சி நடத்துவதற்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு ஜாக்குலினுக்கு 3 நிமிட நிகழ்ச்சிக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் வழங்கப் பட்டுள்ளதாம். இந்த சய்பை விழாவில் பரினீதி சோப்ரா, ரிச்சா சட்டா, ஹூமா குரேஷி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது சல்மான் கான் போய் ராஜபக்சேவுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் ஜாக்குலினும் கலந்து கொண்டார். ஜாக்குலின் மூலமாகவே சல்மானை ராஜக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வரவழைத்தார் என்று பேச்சு எழுந்தது நினைவிருக்கலாம்.