தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்தான் ஆந்திர முதல்வர்! - ரோஜா

ஹைதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறுகையில், "தெலுங்கானா பகுதியில் உள்ள சிங்கரேனி நிலக்கரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கிடைக்கவில்லை. மின் உற்பத்தி இல்லாததால் ஆந்திரா தற்போது இருளில் மூழ்கி உள்ளது.
தொழிலாளர் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர ஆந்திர அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. தெலுங்கானா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் முடியவில்லை. இதனால் ஆந்திர அரசு செயல்படாத அரசாக உள்ளது. இந்த அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆந்திராவில் எப்போது தேர்தல் வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டிதான் முதல்வர். ஆந்திர மக்கள் அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் அவர் மீது எத்தனை பொய் வழக்கு போட்டாலும் கோர்ட்டில் நிரபராதி என்பதை நிரூபிப்பார்," என்றார்.


Click it and Unblock the Notifications











