Just In
- 6 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 28 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 40 min ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 54 min ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'எனக்குப் போட்டியே அந்த முன்னாள் நடிகையின் மகள்தான்...' அதிரடியாக ஒப்புக்கொண்ட இளம் ஹீரோயின்!
மும்பை: தனக்கு சினிமாவில் போட்டியாக இருப்பது, அந்த முன்னாள் நடிகையின் மகள்தான் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார், இளம் ஹீரோயின்.
பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இந்தியில் ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படம் மூலம், தெலுங்கு மற்றும் தமிழுக்கும் வர இருக்கிறார்.

ஃபைட்டர்
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. முதல் ஷெட்யூல் அங்கு முடிந்துவிட்டது.

விஜய் தேவரகொண்டா
படத்தின் ஷூட்டிங்கின் போது அனன்யா பாண்டேவும், விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தில், முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர், ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாயின. பின்னர் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

ஜான்வி கபூர்
இந்நிலையில், தனக்கு சினிமாவில் போட்டியாக இருப்பது, நடிகை ஜான்வி கபூர் என்று தெரிவித்துள்ளார் அனன்யா. சினிமா பிரபலங்களின் மகள் என்பதால் வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிடுகிறது என்பது உண்மைதான். இதில் மறைக்க ஏதும் இல்லை. ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் தான் பழகுகிறோம். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.

அனுஷ்கா சர்மா
என் தந்தையை நான் பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக திறமையை வளர்க்க வேண்டும். சினிமா பின்னணி இல்லாமல் வந்துள்ள ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா போன்றவர்களையும் சொல்ல வேண்டும். சினிமாவின் எனக்குப் போட்டியாக இருப்பது யார் என்று கேட்கிறார்கள். வேறு யார்? ஜான்வி கபூர்தான் என்று தெரிவித்துள்ளார் அனன்யா.