Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தற்கொலைக்கு முன் ஜியா மது அருந்தியிருந்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்
மும்பை: சென்ற மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகை ஜியாகான், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மது அருந்தியது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
காதல் தோல்வியால், ஜூன் 3ம் தேதி மும்பையில் ஜூஹு அப்பார்ட்மெண்டில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் 25 வயது அழகு நடிகையான ஜியாகான்.
ஜியாவின் தற்கொலைக்குப் பிறகு அவர் கைப்பட எழுதியதாக ஆறு பக்க கடிதம் ஒன்றை வீட்டில் கண்டெடுத்த அவரது தாயார், பின்னர் அதனை போலீஸ் வசம் ஒப்படைத்தார். அதில் நடிகர் சூரஜ் உடனான தனது காதல் தோல்வியை விவரித்திருந்தார் ஜியா.
அக்கடிதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சூரஜ் கிட்டத்தட்ட 21 நாட்களை சிறையில் கழித்தபின்னர், சென்ற வாரம் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், போலீஸ் வசம் சமர்ப்பிக்கப் பட்டுள்ள ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜியா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.