Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
நயன்தாராவுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது?: வியக்கும் ஜோதிகா
சென்னை: நயன்தாராவுக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது என்று ஜோதிகா வியப்படைந்துள்ளார்.
ஹீரோக்கள் அளவுக்கு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த படங்கள் அவருக்காகவே ஓடி வசூலை அள்ளிக் குவிக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் அவரை நம்பி படம் எடுக்கிறார்கள். அவர் கேட்கும் சம்பளத்தையும் கொடுக்கிறார்கள்.
படங்கள்
நயன்தாராவை பார்த்துவிட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்த அனைவரும் வெற்றி பெற்றுவிடவில்லை. ஆனால் நயன்தாராவுக்கு மட்டும் இந்த யுக்தி ஒர்க்அவுட் ஆகிறது. அதனால் அவர் தனது சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்திவிட்டார். ஹீரோக்களை வணங்கும் ரசிகர்களை தன்னையும் கொண்டாட வைத்துள்ளார் நயன்தாரா.
ஜோதிகா
நயன்தாராவின் இந்த பாணி ஜோதிகாவை வியக்க வைத்துள்ளது. நயன்தாரா தனக்கென்று மார்க்கெட் வைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். வாழ்வில் முன்னேற கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இருப்பது எளிது அல்ல. தன்னை சுற்றி நகரும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்கிறார் ஜோதிகா.
காட்சிகள்
ஒரே நாளில் அவர் பல காட்சிகளில் நடிக்கிறார். குறித்த காலத்திற்குள் நடித்து முடித்துவிடுகிறார். இப்படி நடிப்பது கஷ்டம். குறித்த காலத்திற்குள், நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுக்கும் நயன்தாராவை பார்த்தால் வியப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா. ஒரு பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிகா வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள்
ஹீரோயின்களாகிய நாங்கள் பிரியாணி காட்சிகள், ஒயின் ஷாப் காட்சிகளில் நடிக்க முடியாது. குழந்தை பிறந்த பிறகும் ஹீரோயின்கள் குண்டாக இருக்கக் கூடாது. இளம் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்ய முடியாது. இப்படி பல விஷயங்கள் உள்ளது. அதனால் நல்ல கதை, நடிப்பில் தான் எங்களால் கவனம் செலுத்த முடியும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
ஆதரவு
செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய ஜோதிகாவுக்கு கணவர் சூர்யா பேராதரவாக உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் வரும் 27ம் தேதி ரிலீஸாக உள்ளது. அவரின் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் ராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.