Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சே, மிஸ் பண்ணிட்டேனே.. வருத்தப்படும் ஜோதிகா!
சென்னை: பசங்க 2 படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்தை நழுவவிட்டது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பசங்க 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியால் மகிழ்ந்து போன சூர்யா இயக்குநர் பாண்டிராஜ்க்கு காரையும், இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்கச்சங்கிலியையும் பரிசளித்திருக்கிறார்.
மேலும் இப்படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்தைப் பாராட்டி அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.இந்நிலையில் நடிகை ஜோதிகா தான் அந்த வேடத்தை நழுவவிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
அதாவது பசங்க 2வில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்திற்கு முதலில் ஜோதிகாவைத் தான் கேட்டார்களாம். ஆனால் அப்போது 36 வயதினிலே படத்தில் ஜோதிகா பிஸியாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அதனால் இந்தப் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுப்பது ஜோதிகாவிற்கு சிரமமாக இருக்க, நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம்.
இப்பொது பசங்க 2 படத்திற்கும், அமலாபால் பாத்திரத்திற்கும் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து இந்தப் படத்தை நழுவ விட்டு விட்டேனே என்று வருத்தப்பட்டு வருகிறாராம் ஜோதிகா.