Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
36 வயதினிலே... சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ‘ராசாத்தி’!
சென்னை: 36 வயதினிலே படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு ஜோதிகா தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த போதே, சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஜோதிகா, தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார்.
8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஜோதிகா நடிக்கும் என்பதாலும், பெண்களைப் பற்றிய கதை என்பதாலும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார் ஜோதிகா. இது தொடர்பாக சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது :-
ரசிகர்களின் பேராதரவுடன்...
பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாட விரும்பும் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் உங்கள் முன் இன்று பெருமையுடன் நின்று கொண்டிருக்கக் காரணம் ரசிகர் பெருமக்களாகிய நீங்கள்தான்.
ஆதரவு...
உங்களில் ஒவ்வொருவரும் இந்த படத்தை ரசித்திருக்கிறீர்கள். பெண்களை வெற்றியை நீங்கள் போற்றுகிறீர்கள். அதனால்தான், இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது.
கனவுகளை தியாகம் செய்யும் பெண்கள்..
சமுதாயத்தில் இனி பல வசந்திகள் தங்கள் லட்சியங்களை வெல்ல முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். இல்லத்தரசியாக அன்றாடம் பல பணிகளை ஆற்றி வரும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்கிறார்கள்.
|
பெண்கள் மதிக்கப் பட வேண்டும்...
அப்படிபட்ட பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என எனக்குள் ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையே இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.