twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரிதாவின் மகளாக ஜோதிகா! சரிதாவின் மகளாக ஜோதிகா நடிக்க சூப்பர் படம் ஒன்று தயாராகி வருகிறது.ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ளவர் ரேவதி வர்மா. கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா, 60க்கும்மேற்பட்ட இந்தி நாவல்களையும் எழுதியுள்ளார்.இவர் விளம்பரப் படங்கள் எடுத்ததில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்திற்கு ஜூன். ஆர் (ஒதணஞு. கீ) என்று பெயர் வைத்துள்ளார் ரேவதி.இதில் சரிதா தாயாகவும், அவரது மகளாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கல்யாணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும், தன்னம்பிக்கை அதிகமுடைய பெண்ணாக இதில் குஷ்புநடித்துள்ளார்.இப்படம் குறித்து ரேவதி வர்மா கூறுகையில், எனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைஅடிப்படையாக கொண்டு இதன் கதையை அமைத்துள்ளேன். தாய்க்கும், மகளுக்கும் இடையேயான உறவைஅடிப்படையாகக் கொண்டது இதன் கதைக் கரு.ஜோதிகா, குஷ்பு மற்றும் சரிதாவுக்கு இந்தப் படம் மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அந்தஅளவுக்கு வித்தியாசமான கதை இது. இதில் ஜோதிகாவின் பெயர் ஜூன் ஆர். இந்த மூன்று நடிகைகள் தவிர முன்னணி நடிகர் ஒருவரும் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் யார் என்பதைஇப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறேன். படம் வெளியாகும்போது அவரை ரசிகர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்றார் ரேவதி.இப்படத்திற்கு மது அம்பட் கேமராவைக் கையாள்கிறார். மலையாள இசையமைப்பாளர் சரத் என்பவர்இசையமைக்கிறார். ஐடியல்வேர்ல்ட் 1 செலுலாய்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் அன்சாரி படத்தைத்தயாரிக்கிறார்.படத்தை உடனடியாகத் தொடங்கி விரைவில் வெளியிட ரேவதி வர்மா திட்டமிட்டுள்ளார்.

    By Staff
    |

    சரிதாவின் மகளாக ஜோதிகா நடிக்க சூப்பர் படம் ஒன்று தயாராகி வருகிறது.

    ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ளவர் ரேவதி வர்மா. கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா, 60க்கும்மேற்பட்ட இந்தி நாவல்களையும் எழுதியுள்ளார்.

    இவர் விளம்பரப் படங்கள் எடுத்ததில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்திற்கு ஜூன். ஆர் (ஒதணஞு. கீ) என்று பெயர் வைத்துள்ளார் ரேவதி.

    இதில் சரிதா தாயாகவும், அவரது மகளாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கல்யாணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும், தன்னம்பிக்கை அதிகமுடைய பெண்ணாக இதில் குஷ்புநடித்துள்ளார்.

    இப்படம் குறித்து ரேவதி வர்மா கூறுகையில், எனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைஅடிப்படையாக கொண்டு இதன் கதையை அமைத்துள்ளேன். தாய்க்கும், மகளுக்கும் இடையேயான உறவைஅடிப்படையாகக் கொண்டது இதன் கதைக் கரு.

    ஜோதிகா, குஷ்பு மற்றும் சரிதாவுக்கு இந்தப் படம் மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அந்தஅளவுக்கு வித்தியாசமான கதை இது. இதில் ஜோதிகாவின் பெயர் ஜூன் ஆர்.

    இந்த மூன்று நடிகைகள் தவிர முன்னணி நடிகர் ஒருவரும் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் யார் என்பதைஇப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறேன். படம் வெளியாகும்போது அவரை ரசிகர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்றார் ரேவதி.

    இப்படத்திற்கு மது அம்பட் கேமராவைக் கையாள்கிறார். மலையாள இசையமைப்பாளர் சரத் என்பவர்இசையமைக்கிறார். ஐடியல்வேர்ல்ட் 1 செலுலாய்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் அன்சாரி படத்தைத்தயாரிக்கிறார்.

    படத்தை உடனடியாகத் தொடங்கி விரைவில் வெளியிட ரேவதி வர்மா திட்டமிட்டுள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X